
வைகாசி விசாகம் அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
ஒவ்வொருவரும் தங்கள் கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபடுகிறார்கள். முருகன், விரதம் கொண்ட கடவுள்களில் ஒருவராக இருக்கிறார். முருகனுக்கு விரதம் இருப்பதற்கான முக்கிய நாட்கள் சஷ்டி, கார்த்திகை, தைப்பூசம், செவ்வாய் கிழமை மற்றும் வைகாசி விசாகம் போன்றவை. இந்த நாட்களில், முருகனுக்கு 48 நாட்கள் மாலையிட்டு விரதமிருப்பார்கள், மேலும் மாலை அணியாமலும் விரதமிருப்பார்கள். இவ்வாறு விரதமிருப்பதால், முருகன் கேட்ட வரத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக, தானம் கொடுப்பது மிகவும் சிறந்தது. தானம் கொடுத்தால், நமது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஒவ்வொரு தானத்திற்கும் தனித்தனியான பலன்கள் உள்ளன. அதற்கேற்ப, வைகாசி விசாகம் அன்று தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னவென்று நாம் அறிந்து கொள்வோம்.
வைகாசி விசாகம் அன்று தானம் செய்ய வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்:
வைகாசி விசாகம் அன்று, முருகனை நினைத்து விரதமிருந்து வழிபடுவார்கள். ஆனால், அந்த நாளில் விரதத்தை கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல், சில வகையான தனங்களையும் தானமாக வழங்க வேண்டும். அப்படி என்னென்ன பொருட்கள் தானமாக வழங்க வேண்டும் என்பதனை நாம் இப்போது அறிந்து கொள்வோம்.
உங்களால் என்னென்ன பொருட்களை தானமாக வழங்க முடிகிறதோ அதையெல்லாம் தானமாக வழங்கலாம். இந்த நாளில் தானமாக வழங்குவதன் மூலம் உங்களுடைய பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். வீட்டில் நீங்கள் இதுவரை கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் அவை நீங்கும். உங்களுடைய துன்ப காலங்கள் நீங்கும். அதனால தான் வைகாசி விசாகம் அன்று முருக பெருமானை மனதார நினைத்து விரதமிருந்து தானம் வழங்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
முதலில் வைகாசி விசாக நாளன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று ஒரு லிட்டர் பால் வாங்கி அபிஷேகத்திற்க்கு வாங்கி தர வேண்டும். அதன் பிறகு தானமாக வாங்கி தர வேண்டிய பொருட்கள் பால், தயிர், சர்க்கரை, வஸ்திரம் ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.
அதுமட்டுமில்லாமல், அன்றைய தானம் அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பு. இந்த நாளன்று அன்னதானம் வழங்குவதால், நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் வம்சத்திற்கும் பலன்கள் கிடைக்கும்.